Friday, July 24, 2015

ஒரே வீட்டில் இருவருடன் உல்லாசம்! துடிதுடிக்க கொன்ற பெண்கள்

ஒரே வீட்டில் வசித்து வந்த இரண்டு பெண்களுடன் காதல் லீலைகளில் ஈடுபட்ட நபரை துடிதுடிக்க கொலை செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது பெரிய நகரமான சார்ஜாவில் உள்ள வீடு ஒன்றில் ஆசியாவை சேர்ந்த நபர் ஒருவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அந்த வீட்டில் வேலை செய்து வந்த இரண்டு ஆசிய பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி இந்நபர் தான் நினைத்த நேரத்தில் அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதை முதலில் அறிந்திருந்தாத அந்த பணிப்பெண்கள், தங்களது உரையாடலின் போது தாங்கள் மோசம் போனதை தெரிந்து கொண்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்கள், இனி இவனுடன் வாழ முடியாது என முடிவெடுத்ததுடன், அந்நபர் தூங்கும் நேரத்தில் அவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

மேலும் தாங்கள் கொன்ற விடயத்தை பிறர் கண்டுபிடிக்காமல் இருக்க சில மாத்திரைகளை அந்நபருக்கு அருகில் சிந்திவிட்டு அவ்வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார், அப்பெண்களை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது அந்த பெண்கள் அழித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது

No comments:

Post a Comment